பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பில் மாத்தறை பிரதேச ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று நாளை (11) மாத்தறை வல்கம சரசி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மக்கள் பணத்தை முறைகேடுகள் எதுவுமின்றி சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை என்பதை கருத்திற்கொண்டு அதனை எவ்வாறு கண்காணிப்பது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தௌிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.
டிரான்ஸ்பேரன்ஸ் இண்டர்நேஷனல் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் சுசெரி செவன சட்ட ஆலோசனை சேவையினூடாக இத்தௌிவுபடுத்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.