அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலவிய மோசமான காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக Hambantota International Port Group PVT Limited நிறுவனம் 25,000 அமெரிக்க டொலர் ( 38,37,500 இலங்கை ரூபா) வழங்கியுள்ளது.
மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த நிதிக்கான காசோலையை Hambantota International Port Group PVT Limited நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ஹங் டியான் மற்றும் China Port Holding நிறுவனத்தின் தலைவர் ரே ஹேன், பிரதான நிறைவேற்று அதிகாரி திஸ்ஸ விக்கிரமசிங்க மற்றும் பிரதான வர்த்தக அதிகாரி ஆகியோர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்தனர்.
இந்நிதியானது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வீடுகளை புனர்நிர்மானம் செய்யவும் அவ்வீடுகளுக்கான உபகரணங்களை வழங்கவும் பயன்படுத்தப்படவுள்ளது.