நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பத்தாயிரம் ரூபா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனர்த்த முகாமைத்துவ மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சொத்து சேதங்களுக்குள்ளானவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்படி அனர்த்த நிலைமை தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கூட்டமொன்று நேற்று (30) பாராளுமன்றில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.