நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீன் பிடித்துறை மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மீனவர்களிடம் கோரியுள்ளார்.
ஏற்கனவே மோசமான காலநிலை தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளபோதிலும் சில படகுகள் மீன்மிடிக்காக சென்றுள்ளன என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அவற்றில் சில காணாமல் போயுள்ளதாக அறியமுடிகிறது. காணாமல் போயுள்ள படகுகளை தேடும் பணிகளில் கடற்படையினரும் கரையோர பாதுகாப்புத் திணைக்களமும் ஈடுபட்டுள்ளன என்று அமைச்சர் அரசாங்க உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.