எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் 2000 கிராமோதய வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் இது வரை 490 கிராமோதய வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 500 திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும். 2020ம் ஆண்டில் மேலும் 2000 வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும்.
அனைவருக்கும் நிழல் வீட்டுத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினருக்கானது அல்ல. எந்தவித அரசியல் செல்வாக்குமற்ற வறிய மக்களுக்காகவே இவ்வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் குறைந்த வருமானமுடைய மக்கள் சுயதொழில் வழங்கி மற்றவர்களிடம் தங்கி வாழாமல் இருக்கச் செய்வது திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.