பாலர் பாடசாலை கல்வி தரத்தை மேம்படுத்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து செயற்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சின் முன்பருவ அபிவருத்தி திட்டத்தின் கீழ் குருணாகலை மாவட்டத்தில் 150 பாலர் பாடசாலைகளுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாலர் பாடசாலை கல்வியானது மாணவர்களின் வாழ்க்கையில் முதல் அடித்தளமாக உள்ளமையினால் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டிய அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதற்காக சர்வதேச உதவியை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்குவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன
இதன்போது சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.