பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாத 25 புகையிரத நிலையங்களை அடுத்த ஆண்டு புனரமைப்புச் செய்ய நூறு கோடி ரூபாவை ஒதுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
குருணாகலை புகையிரத நிலையத்தில் 55 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்காவது மேடையை மக்கள் பாவனைக்கு கையளித்தல் மற்றும் 65 மீற்றர் ரயில் பாதையை சேவைக்காக கையளித்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய அரசு பொதுப்போக்குவரத்து சேவையை கட்டியெழுப்புவதை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. அதிலும் முக்கிய இடம் ரயில் போக்குவரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் 45 வீதமானவர்கள் மட்டுமே ரயிலை பயன்படுத்துகின்றனர். நட்டத்துடனேயே ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது. எனினும் மக்கள் சேவையை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. இப்புகையிரத நிலையில் 4 மேடைகள் மட்டுமே இருந்தன. இன்று ஐந்தாவது மேடை அமைக்கப்படுவதனூடாக பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கான வாய்ப்புகள் மேலும் வழங்கப்படுகின்றன. கட்டிடங்களை கட்டுவதனால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
"