தெங்கு அபிவிருத்திச் சபையினூடாக நிவாரண விலையில் தேங்காய் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையின் கீழ் 36,5024 பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடமாடும் லொரிகளினூடாக 65 ரூபாவுக்கு 115,667 தேங்காய்களும் சதோச விற்பனை நிலையத்தினூடாக 177,940 தேங்காய்களும் கப்ருக்க சங்கத்தினூடாக 71,407 தேங்காய்களும் விற்பனை செய்யப்படவுள்ளன.
பல மாதங்களாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேங்காய் அறுவடை மிகவும் குறைந்துள்ளது. 2016ம் ஆண்டு 3011 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்யப்பட்டன. இவ்வாண்டு 2347.1 ஆக தேங்காய் அறுவடை குறைவடைந்துள்ளது.
நாட்டில் நிலவும் தேங்காய்த் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு தேங்காய் இறக்குமதி செய்ய தான் தனிப்பட்டரீதியாக விரும்பியபோதும் அரச கொள்கைக்கமைய தேங்காய் இறக்குமதி செய்யப்படமாட்டாது என்றும் தெரிவித்த அமைச்சர், வெளிநாடுகளில் இருந்த தேங்காய் இறக்குமதி செய்யும் போது நோய்கள் பரவும் அபாயம் உள்ளமையினால் இறக்குமதி செய்வதில்லை என்று கொள்கைரீதியாக அரசாங்கம் தீர்மானமெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.