நிரந்தர வீடுகள் இல்லாமல் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் வாழும் வறுமையான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'கிராமசக்தி' திட்டத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்கள் பிரதேச செயலக பிரிவுகளில் விரிவாக்கப்பட்டுள்ளது.
கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று மீள செலுத்துவதற்கு பொருளாதார பலமில்லாத குடும்பங்களுக்கு திரும்பி பெறப்படாத 500,000 வீடமைப்பதற்கான நிதியுதவி இத்திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ளது.
'கிராமசக்தி' வீடமைப்புத் திட்டதிற்காக அரசாங்கம் 250 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளதுடன் அதனூடாக 500 வீடுகள் அந்நிதியினூடாக நிர்மாணிக்கப்படவுள்ளன. நாட்டில் வீடபிவிருத்தித் திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 6000 இலட்சம் ரூபா நிதியை முழுமையாக கிராமசக்தி திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
இதனூடாக 25 மாவட்டங்களில் 1200 புதிய வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளன.
கிராமசக்தி திட்டத்தினூடாக வீடுகளை பெறும் குடும்பங்களுக்காக பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.