எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 47 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுரனையுடன் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் எல்பிட்டிய ஆனந்த மத்திய மகாவித்தியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முழுமையான மற்றும் பாதியளவு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.
தென்மாகாணசபை உறுப்பினர் ஜயசிறி நாணயக்கார, எல்பிட்டிய பிரதேச செயலாளர் சிசிர குமார உட்பட பல அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.