நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் செயலிழக்கப்பட்டிருந்த இரு இயந்திரங்களில் ஒன்று இன்று (20) மீள செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களாக செயலிழந்திருந்த மின்னுற்பத்தி இயந்திரங்கள் இரண்டில் ஒன்று இன்று இரவு தொடக்கம் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகப்பூர்வ இணையதளத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.
இதனூடாக 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்தொகுதிக்கு இணைத்துக்கொள்ள முடியும். பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் செயற்பாடுகளுக்காக குறித்த இயந்திரங்கள் இரண்டும் இம்மாதம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டது. மற்றைய இயந்திரமும் இன்னும் சில தினங்களில் இயக்கப்படும். அவ்வியந்திரத்தினூடாகவும் 300 மெகாவோல்ட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் நிறுத்தப்பட்டதனூடாக இழக்கப்பட்ட 600 மெகாவோல்ட் மின்சாரத்தை நீர் மின்னுற்பத்தி நிலையம் மற்றும் டீசல் மின்னுற்பத்தி நிலையம் என்பவற்றினூடாக பெறப்பட்டது என்று அமைச்சின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.