காலி கிந்தோட்டை சம்பவம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புவை தடுப்பதற்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை மேகொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சமூக வலைதளங்களினூடாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்னர்.
காலி கிந்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட அமையின்மை தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பிரசாரங்களும் வௌியிடப்படுகின்றன. இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் கோரியுள்ளனர்.