இலங்கை இராணுவத்தின் 20 வது பரா விளையாட்டுப் போட்டி இம்மாதம் 22ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை ஹோமாகக தியகம விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அங்கவீனமுமற்ற விளையாட்டுத் திறமையுடைய படையினருக்காக இப்போட்டி நடைபெறவுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டியில் சைக்கிள் ஓட்டம்,நாற்காலி மரதன்,வில் ஏய்தல்,பாரம் துாக்குதல்,ஹேன்டபோல் ,ஆசன ஹேன்டபோல்,கடற்கரை ஹேன்டபோல்,மேசைப்பந்து,கிரிக்கெட்,நீச்சல்,நாற்காலி சக்கர மேசைப்பந்து,வாயு துவக்கு வெடிவைப்பு,மெய்வல்லுனர் போட்டி என்பன நடைபெறவுள்ளது.
இம்மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ள இறுதி நிகழ்வானது பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்னவின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அங்கவீனமுற்ற இராணுவத்தினருடைய விளையாட்டுத் திறமையை வௌிக்கொண்டும் வரும் வகையில் கடந்த 1991ஆம் ஆண்டு 'இராணுவ அங்கவீனமுற்ற படை வீரர்களின் போட்டி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு இராணுவ பரா விளையாட்டு போட்டியாக பெயர் மாற்றப்பட்டது