மருத்துவக்கல்வியை விரிவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய வட மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் மருத்துவப்பீடங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய வைத்திய பீடங்களை ஸ்தாபிப்பதற்காக 1250 மில்லியன் ரூபா நிதி எதிர்வரும் 2018ம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ருஹுணு பல்கலைக்கழகத்தில் உள்ள வைத்திய பீடத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு கராப்பிட்டிய வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவொன்றை அமைக்க அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் 50 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.
புதிய வைத்தியபீடங்களை நிர்மாணிப்பதனூடாக வருடாந்தம் அதிக எண்ணிக்கையான மாணவர்களை மருத்துவக்கல்வியில் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதுடன் தற்போது நிலவும் போட்டித்தன்மையும் குறைவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.