சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் 200 பேருக்கு 6.5 மில்லியன் ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகை சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று (09) பத்தரமுல்ல சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை கேட்போர்கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது
'''பெருந்தோட்ட பலம் மற்றொரு பலம்'' திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட தேயிலை சக்தி காப்புறுதி திட்டத்தின் கீழ் இவ்வாறு காப்புறுதி இழப்பீட்டுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.