வாகனங்கள் தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாது என்று வௌியிடப்பட்ட சுற்றுநிரூபம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது தேவையான அளவு எரிபொருள் கைவசமுள்ளமையினால் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 2500 மெற்றிக்தொன் எரிபொருள் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நேற்றைய தினம் (07) மட்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2623 மெற்றிக்தொன் எரிபொருளை விநியோகித்துள்ளது. நேற்று மட்டும் 3000 மெற்றிக் தொன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நாளையும் (09) 3000 மெற்றிக் தொன் விநியோகிக்கப்படும்.
இன்றும் (08) மாலை 7 மணியளவில் எரிபொருள் தாங்கிய கப்பல் இலங்கை துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.