தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரையில் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சுற்று நிரூபம் ஒன்றினூடாக அறிவித்துள்ளது.
2017/01 இலக்கத்தின் கீழ் அமைச்சின் அபிவிருத்தி செயலாள் உபாலி மாரசிங்கவினால் இச்சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை (08) மீண்டும் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒன்பதாம் திகதியளவில் நிலைமை வழமைக்கு திரும்பும் என்றும் எரிபொருள் வள அமைச்சர் அர்ஜுன் ரணதுங்க இன்று (07) பாராளுமன்றில் வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.