மாத்தறை மாவட்டத்தில் சட்டரீதியான காணி உறுதி பத்திரம் இல்லாதோருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (05) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தெணியாய பிரதேசத்தில் நடைபெற்றது.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள சுமார் 4000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இத்திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ளது.
காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு முதற்தடவையாக மாத்தறை மாவட்டத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.