புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயும் அரசியலமைப்பு சபை அமர்வு இன்றும் (02) எதிர்வரும் ஆறாம் திகதியும் (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழிநடத்தல் குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு கடந்த திங்கட் கிழமை தொடக்கம் பாராளுமன்றம் அரசயலமைப்புச்சபையாக மாற்றப்பட்டு மூன்று தினங்களுக்கு விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. எனினும் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமின்மை காரணமாக விவாதத்திற்கான வாய்ப்பு கிடைக்காமையினால் மேலும் இரு தினங்களுக்கு விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.