பேர வாவி அபிவிருத்தி பணிகளின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு வீடமைப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மெத்சந்த செவன அடுக்கு மாடி திட்டத்தின் முதற்கட்டத்தினூடாக அபிவிருத்தி பணிகளின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய பூர்த்தி செய்யப்பட்ட மெத்சந்த அடுக்குமாடி திட்டத்தின் முதற்கட்டம் எதிர்வரும் 30ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.
2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் 2020ம் ஆண்டு வரை 25,00 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.