மட்டக்களப்பு- ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (25) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பேரணியில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இப்பேரணியானது பாடசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையைச் சூழவூள்ள பிரதேசங்க பவனி சென்று மீண்டும் பாடசாலை அடைந்தது.
LDA_dmu_ batti