வௌ்ளை பிரம்பு தின தேசிய நிகழ்வின் நடை பவனி நாளை (25) பத்தரமுல்லை அபேகம அருகில் நடைபெறவுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 400 விழிப்புலனற்றோர் இந்நடை பவனியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
சமூக சேவைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள தேசிய நிகழ்வு காலை 8.30 மணிக்கு அபே கம வளாகத்தின் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள நுழைவாயில் அருகில் நடைபெறும்.
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொள்வார்.