கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள 1,220 குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறந்த வாழ்க்கைத் தரத்துடன் கூடியவகையில் அமைக்கப்படவுள்ள இவ்வீடமைப்புத் திட்டமானது இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை பொருத்தமான காணிகள் பெற்று வீடுகளை கட்டி இலவசமாக உரிமையாளர்களுக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.